தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் டி.வி திரைப்பட தரத்துக்கு தொடர்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வந்தாள் ஸ்ரீதேவி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பொதுவான சின்னத்திரை சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வந்தாள் ஸ்ரீதேவி தொடரின் நாயகி அனன்யா சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்திருக்கிறார். ஹீரோயின்களை இயற்கையான சூழுலில் ஆடவிட்டு படம்பிடிக்க சினிமா உலகம் மசினகுடிக்கு செல்லும், அந்த மசினகுடியில் இருந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. அப்பா ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றுகிறார்.
சென்னையில் படித்தவருக்கு அப்படியே மீடியாக்கள் பக்கம் கவனம் திரும்ப பல சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு சாருஹாசன் தாதாவாக நடிக்கும் தா தா 87 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் வந்தாள் ஸ்ரீதேவி ஆடிசனில் கலந்து கொண்டு அதிலும் தேர்வாகி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தா தா 87 படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா நடிகையாக புகழ்பெற வேண்டும் என்பதே அனன்யாவின் ஆசை.