ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் டி.வி திரைப்பட தரத்துக்கு தொடர்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வந்தாள் ஸ்ரீதேவி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பொதுவான சின்னத்திரை சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வந்தாள் ஸ்ரீதேவி தொடரின் நாயகி அனன்யா சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்திருக்கிறார். ஹீரோயின்களை இயற்கையான சூழுலில் ஆடவிட்டு படம்பிடிக்க சினிமா உலகம் மசினகுடிக்கு செல்லும், அந்த மசினகுடியில் இருந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. அப்பா ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றுகிறார்.
சென்னையில் படித்தவருக்கு அப்படியே மீடியாக்கள் பக்கம் கவனம் திரும்ப பல சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு சாருஹாசன் தாதாவாக நடிக்கும் தா தா 87 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் வந்தாள் ஸ்ரீதேவி ஆடிசனில் கலந்து கொண்டு அதிலும் தேர்வாகி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தா தா 87 படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா நடிகையாக புகழ்பெற வேண்டும் என்பதே அனன்யாவின் ஆசை.