தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இது நடிகர் ஆர்யாவுக்கு நடத்தப்பட்ட சுயம்வர நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த 7 ஆயிரம் பெண்களில் இருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் இறுதி சுற்றுக்கு 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவரை செலக்ட் பண்ணினால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்று கூறி ஆர்யா யாரையும் தேர்வு செய்யவில்லை.
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதே இது பெண்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சி என்று பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. எல்லோரும் எதிர்பார்த்ததைபோலவே யாரையும் திருமணம் செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தார் ஆர்யா. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சினிமாத் துறையிலும் விமர்சிக்கப்படுகிறது.
அண்மையில் நடந்த மிஸ்டர் சந்திரமவுலி பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்யா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆர்யா நேரடியாக கிண்டல் செய்யப்பட்டார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜெகன், "பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி மோசம் செய்வதற்கு ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு" என்று கூறி அந்த சொல்லையும் கூறினார்.
விஷால் பேசும்போது "ஆர்யா காசு செலவு பண்ணி செய்து கொண்டிருந்த வேலையை ஒரு சேனல் அவனுக்கு பணம் கொடுத்து செய்ய வைத்தது" என்றார்.
"16 பெண்களுடனும் சாந்தி முகூர்த்தம் மட்டும்தான் நடக்கல மற்ற எல்லாத்தையும் நடத்திட்டாரு ஆர்யா" என்றார் தொகுப்பாளர் ஜெகன்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆர்யா "பார்ட் 2 ல பார்த்துக்கலாம்" என்றார். ஆனாலும் அன்றைய நிகழ்ச்சியில் ஆர்யா கலகலப்பாக இல்லை. நிகழ்ச்சிக்கு பின்னர் நண்பர்களிடம் "நம்ம ஆளுங்களே இப்படி கிண்டல் பண்றாங்களே" என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
எது எப்படியோ எங்க வீட்டு மாப்பிள்ளை பார்ட் 2 உறுதி. ஆனால் எந்த அளவிற்கு பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. பார்ட் 2வுக்கு எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.