ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட சேனல் கலர்ஸ் தமிழ். இந்த சேனலின் விளம்பர தூதராக இருக்கிறார் ஆர்யா. இந்த சேனலின் ஓப்பனிங் அட்ராக்ஷ்னுக்காக ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆர்யா, தான் மணந்து கொள்ளப்போகும் பெண்ணின் சுயவம்வர நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரம் இளம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதுமே பல பெண்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என எதிர்த்தனர். அதனையும் மீறி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு கஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகியோர் தேர்வானார்கள். இதில், ஆர்யா, சீதாலட்சுமியை மணமகளாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்யா யாரையுமே தேர்வு செய்யவில்லை.
யாராவது ஒருவரை தேர்வு செய்தால் மற்றவர்கள் மனம் புண்படும், அவர்கள் குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள் என்று காரணம் கூறி யாரையும் தேர்வு செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தார் ஆர்யா.
இந்த முடிவும், நிகழ்ச்சியும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.