ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப என்கிற மியூசிக் ரியாலிட்டி ஷோ மூலம் இசை உலகில் திடீர் நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர், 60 வயதை தாண்டிய ரமணியம்மாள். பழைய பாடல்களை அனாயசமாக பாடி கைதட்டல்களை அள்ளும் ரமணியம்மாளுக்கு ராக் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். திடீர் புகழால் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று வந்து விட்டார். வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் இப்போது கை நிறைய பணத்துடன் நடுத்தர வர்கத்துக்கு பெண்ணாகியிருக்கிறார்.
சரிகமப நிகழ்ச்சியின் இறுதி போட்டிகள் வருகிற 14ந் தேதி நடக்கிறது. இறுதி சுற்றில் போட்டியிட ரமணியம்மாள் உள்பட 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 63 வயதாகும் ரமணியம்மாள் 20 முதல் 25 வயது வரை உள்ள ஜாஸ்கரன் சிங், சஞ்சய், ஸ்ரீநிதி, வர்ஷா ஆகிய 4 இளம் பாடகர்களுடன் மோதுகிறார்.
நடுவர்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ரசிகர்களின் ஓட்டு ரமணியம்மாளுக்குத்தான் கிடைக்கும் அதனால் அவர் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். பரிசை வென்று சினிமா பாடகி ஆக வேண்டும் என்பதே ரமணியம்மாளின் லட்சியம். அதற்காக தீவிர பயிற்சியில் இருக்கிறார். அவர் வெற்றிபெற வாழ்த்துவோம்.