ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு தொகுப்பாளினி ராதிகா ரெட்டி. தனியார் சேனல்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். 30 வயதான ராதிகா ரெட்டிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதான் கணவரை விவாகரத்து செய்தார். கடந்த 6 ஆண்டுகளாக தன் பெற்றோருடன் ஐதராபாத் முசாப்பேட்டையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராதிகா ரெட்டி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். ராதிகா ரெட்டி எழுதி வைத்திருந்த கடிதத்தில் "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது மனசாட்சியே காரணம்" என்று எழுதியிருக்கிறார். போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.