ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் சிலமாத முயற்சிக்குப் பிறகு விஜய் டிவியில் தயாராக இருந்த ராஜா ராணி சீரியலில் நடிக்க அழைப்பு வர அதில் செம்பா என்ற கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஆலியா மானசா நடித்த அந்த வேடம் இப்போது அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு சினிமாவில் இருந்தும் சில வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஆலியா மானசா, ஜூலியும் 4 பேரும் படத்திற்கு பிறகு சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் உயரத்தை குறிப்பிட்டு வாய்ப்பு தர மறுத்தார்கள், அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறைந்து விட்டது.
அதேசமயம், சின்னத்திரை என்னை கொண்டாடுகிறது. சின்னத்திரையாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப பெரிய திரையாகவே கருதுகிறேன். தொடர்ந்து சின்னத்திரையில் நீடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆலியா மானசா.