ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆண்டு தோறும் சாதனை படைத்த பெண்களுக்கு சக்தி விருது வழங்கி வருகிறது. தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை ஆகிய 6 பிரிவுகளில் 6 பெண்களை தேர்ந்தெடுத்து இந்த விருதுகளை வழங்கி வருகிறது.
2018ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் சிறந்த புலமைக்கான விருது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர சிறந்த தலைமைக்கான விருது பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதிக்கும், துணிவுக்கான விருது ஆணவக் கொலைக்கு எதிராக போராடி வரும் கவுசல்யாவுக்கும், கருணைக்கான விருது சமூக சேவகி பாகீரதி ராமமூர்த்திக்கும், சாதனைக்கான விருது டாக்டர் கமலா செல்வராஜுக்கும், திறமைக்கான விருது கிரிக்கெட் வீராங்கணை காமினிக்கும் வழங்கப்பட்டது.