ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகை தேவதர்ஷினி தற்போது சினிமாவிலும் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருபவர், தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த சேனலில் இருந்து விலகி, தற்போது ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். இடையிடையே சினிமாவிலும் நடிக்கிறார்.
இதற்கு முன்பு அவர் முன்னணி சேனலில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஒவ்வொரு வாரமும் புதிய கான்செப்ட்டுகள், நாட்டு நடப்புகளை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. 6 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவை குறைந்து விட்டதாக சேனல் நிர்வாகம் கருதியதாக தெரிகிறது. இதனால் தேவதர்ஷினி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட வெரைட்டியாக நிகழ்ச்சி பண்ணலாம் என்று முடிவெடுத்து தான் சண்டே கலாட்டா நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக தேவதர்ஷினி தரப்பு தெரிவிக்கிறது.