தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நடிகை தேவதர்ஷினி தற்போது சினிமாவிலும் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருபவர், தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த சேனலில் இருந்து விலகி, தற்போது ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். இடையிடையே சினிமாவிலும் நடிக்கிறார்.
இதற்கு முன்பு அவர் முன்னணி சேனலில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஒவ்வொரு வாரமும் புதிய கான்செப்ட்டுகள், நாட்டு நடப்புகளை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. 6 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவை குறைந்து விட்டதாக சேனல் நிர்வாகம் கருதியதாக தெரிகிறது. இதனால் தேவதர்ஷினி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட வெரைட்டியாக நிகழ்ச்சி பண்ணலாம் என்று முடிவெடுத்து தான் சண்டே கலாட்டா நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக தேவதர்ஷினி தரப்பு தெரிவிக்கிறது.