இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெள்ளித்திரையில் ஜொலித்த குஷ்பு, சின்னத்திரையிலும் முத்திரை பதித்துவிட்டார். கல்கி, ருத்ரா போன்ற தொடர்களில் நடித்து வெற்றி பெற்ற குஷ்பு, அடுத்தபடியாக "பார்த்த ஞாபம் இல்லையோ" என்ற தொடரில் நடித்து வருவதுடன், தனது அவினி டெலிமீடியா சார்பில் தயாரித்தும் வருகிறார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியிருக்கும் குஷ்பு இம்முறை வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.
ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக நுழையும் குஷ்பு, அந்த குடும்பமே கொண்டாடுகிறது. ஆனால்... புகுந்த வீட்டை செழிக்க வைக்க வேண்டிய மருமகள், அதற்கு மாறாக அழிக்கத் தொடங்குகிறாள். அது ஏன்...? என்பது தான் கதையின் களம். இந்த தொடரில் குஷ்புவுடன் சீனு, டெல்லி குமார், பானுமதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, கிரியேட்டிவ் ஹெட்: குஷ்பு சுந்தர், இயக்கம்: என்.பிரியன்.
இந்த புதிய தொடர் கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.