தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஆர்யாவுக்கு கமல்ஹாசன் தனது காதல் இளவரசன் பட்டத்தை கொடுத்தார். அந்த அளவிற்கு அவரது வாழ்வில் காதல் இருந்தது. முதலில் அசின், அதன் பிறகு பூஜா, அதன் பிறகு நயன்தாரா ஆகியோர் ஆர்யாவின் காதலி பட்டியலில் வந்து போனார்கள். ஆர்யாவும், நயன்தாராவும் ராஜா ராணி படத்தில் நடித்த போது விஜய் டி.வி இருவரும் திருமணம் செய்யப்போவததாக ஒரு விளம்பரம் செய்து நிகழ்ச்சி நடத்தியது. காதல்கள் கைகூடாத நிலையில் பெற்றோர்கள் ஆர்யாவுக்கு பெண் பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் ஆர்யா சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தனது மனைவியை தேர்தெடுக்க இருக்கிறார்.
தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் ஸ்டார் அட்ராக்ஷன் ஆர்யா. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் ஆர்யா எந்த பெண்ணின் வீட்டிற்கு மாப்பிள்ளையாக போகிறார் என்பதுதான் கான்செப்ட். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் 70 ஆயிரம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்வந்தார்களாம். இதுகுறித்து கலர்ஸ் தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரன் கூறியதாவது:
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மிகவும் தயக்கத்தோடு ஆர்யாவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டேன். அவர் தயாராக இருக்கிறேன் என ஒரு அறிவிப்பு கொடுத்தவுடன் 70000 அழைப்புகள் வந்தன. 6000 பேர் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தார்கள். அதிலிருந்து ஒரு 18 பேரை தேர்வு செய்து நிகழ்ச்சியை உருவாக்கி வருகிறோம். இதை உண்மையான நிகழ்ச்சியாக உருவாக்கி, உணர்வுப் பூர்வமாகவே கையாண்டிருக்கிறோம். எப்ரல் இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் ஆர்யா என்கிறார்.
அறிவித்தபடி 18 பேரில் ஒருவரை மணப்பாரா இல்லை இந்த சீசன்ல எதுவும் செட்டாகல 2வது சீசன் நிகழ்ச்சியில் பார்ப்போம் என்று நழுவி ஓடுவாரா என்பது போகக்போகத்தான் தெரியும்.