இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள நடிகை சனுஜா. தமிழில் ரேணிகுண்டா, நாளை நமமே, பீமா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது அதே ரெயிலில் ஒரே பெட்டியில் பயணித்த குமரி மாவட்டம் வில்லுக்குறிச்சியை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் சனுஜாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பிய சனுஜா சக பயணிகள் உதவியுடன் அவரை பிடித்து ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தார். ரெயில்வே போலீசார் ஆண்டோ போஸை கைது செய்தனர். அவர் மீது திருச்சூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகை சனுஜாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து சனுஜா நேற்று தனது தந்தையுடன் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு சனுஜா நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். சனுஜா நீதிமன்றம் வந்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.