தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்பட சில படங்களில் நடித்தார். விஜயலட்சுமியால் சினிமாவில் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை,
இதனால் துணை இயக்குனர் பெரோஸை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். கணவனை இயக்குனராக்குவதற்காக பண்டிகை என்ற படத்தை தயாரித்தார். தயாரிப்பாளராகவும், குடும்பத் தலைவியாகவும் மாறிவிட்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இப்போது சீரியலில் நடிக்கிறார் விஜயலட்சுமி.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நாயகி என்ற தொடரின் நாயகி விஜயலட்சுமி தான். ஒரு பிரபல தாதாவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. அந்த தாதாவிடமிருந்து குடும்பத்தை நாயகி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் தொடரின் திரைக்கதை. இனி சின்னத்திரையில் விஜயலட்சுமியை அடிக்கடி பார்க்கலாம்.