ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி அஞ்சனா. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார். அதோடு பொது வெளிகளில் நடக்கும் திரைப்படம் தொடர்பான விழாக்களில் தொகுப்பாளராகவும் இருந்தார். தற்போது அஞ்சனா, திடீரென தான் பணியாற்றிய சேனலில் இருந்து வெளியேறி விட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
சொந்த காரணங்களுக்காக விடைபெறுகிறேன். தொகுப்பாளினியாக கடந்த 10 ஆண்டுகால பயணத்தில் மகிழ்ச்சி, அன்பு, சண்டை, ஏற்றம், இறக்கம் என எல்லாவித அனுபவங்களும் இருந்தது. என்மீது அளவு கடந்த அன்பு கொண்ட எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து விலகினாலும் பொது விழாக்களில் தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார். விலகலுக்கான காரணத்தை அஞ்சனா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் அதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.