பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
''தமிழ் சினிமா வரலாற்றிலேயே, ரிலீசுக்கு முன்னாடி ஒரு படத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு யாருமே காட்டியிருக்க மாட்டாங்க. ஆனா, நாங்க முதல்முறையா 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலமா அதை சாதிச்சுருக்கோம். தரமான 'லோ பட்ஜெட்' படம் பண்றவங்களுக்கு ஒரு புது பாதை காண்பிச்சுருக்கோம்'' என்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர். முதல் படத்திலேயே முத்திரை பதித்து, திரையுலகின் கவனம் ஈர்த்த அவர் அளித்த பேட்டி...
*ஏன் 'சென்னை டூ சிங்கப்பூர்'?
நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சிங்கப்பூர் தான். அது மட்டுமில்லாம எனக்கு இப்படி ஒரு கதை கிடைச்சதுமே சிங்கப்பூர் சூழல் அதுக்கு ரொம்ப கரெக்ட்டா இருக்கும்னு தோணுச்சு. அது தான் காரணம்.
*உங்களுக்கு முதல் இயக்கம், ஜிப்ரானுக்கு முதல் தயாரிப்பு எப்படி?
நான், ஜிப்ரான், எடிட்டர் பிரவீன் கே.எல். நாங்க மூணு பேரும் நண்பர்கள். அவங்க ரெண்டு பேருக்குமே கதை ரொம்ப பிடிச்சுருந்துச்சு. 'ஏன் இதை நம்மளே பண்ண கூடாது'னு தான் ஜிப்ரான் தயாரிக்க முடிவு பண்ணினார். நான் இன்னைக்கு இயக்குனரா இருக்கறதுக்கு காரணமே அவங்க ரெண்டு பேர் தான்.
* ஜிப்ரான் இந்த படத்துல கதையும் எழுதியிருக்காராமே...
ஜிப்ரானுக்குள்ள ஒரு நல்ல கதை சொல்லியும் இருந்திருக்கான். அது எங்களுக்கு ரொம்ப நாளா தெரியாமப் போச்சு. இனி இன்னும் அதிகமா பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்.
* ஜிப்ரானுக்குள்ள இயக்குனரும் இருக்காரோ...
இது வரைக்கும் அவருக்கு அந்த மாதிரி ஆசை இல்லை. இனி எப்டினு தெரியலை, பார்க்கலாம்.
* படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்ததாமே...
(சிரிக்கிறார்) சொன்னா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க, மாதவனோடு சேர்த்து 300 பேருக்கும் மேல கதை சொன்னேன். ஏன்னு தெரியலை யாரும் கமிட் ஆகலை. கடைசியா ஜிப்ரான் மூலமா தான் கோகுல் அறிமுகமானார்.
* படத்தில் எல்லோரும் புதுமுகம், எப்படி ஹேண்டில் பண்னீங்க?
அனுபவம் உள்ளவங்கள ஹேண்டில் பண்றது தான் கஷ்டம். புதுமுகம் ரொம்ப ஈசி. அதே சமயம், புதுமுகங்கள வச்சு பண்ணும் போது தான் கதைக்கான சுதந்திரமும் முழுசா கிடைக்கும்.
* படம் ரிலீசாக ரொம்ப தாமதம் ஆச்சாமே...
ரொம்ப, ரொம்பங்க... என் 27 வயசுல ஆரம்பிச்ச ஸ்கிரிப்ட். இப்ப எனக்கு வயசு 34. இந்த காலகட்டம் என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமானது. ஏன்னா சிங்கிள் டீக்கு கூட வழி இல்லாம இருந்துருக்கேன், அதனால.
* படத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கா?
நிச்சயமா. எதிர்பார்த்ததை விட அதிகமாவே நிறைவேறியிருக்கு. சென்னை, கோவை, மதுரை ரசிகர்கள் கிட்ட 'பிரீமியர் ஷோ' காட்டின அப்பவே பாதி வெற்றி கிடைச்சுருச்சு. மதுரை, கோவை ரசிகர்களுக்கு சினிமா ரசனை ரொம்ப நல்லாருக்கு.
* 'பிரீமியர் ஷோ'வை எப்படி நம்புனீங்க?
யாரும் நம்பலை... அதான் நாங்க நம்பினோம்.
* படத்திற்கு கிடைச்ச மறக்க முடியாத மரியாதை....
கமல் பாராட்டு தான். அவருக்கு படம் ரொம்ப பிடிச்சுருந்துச்சு. முக்கியமா படத்தோட கிளைமாக்ஸ்.
* அடுத்த பயணம்...
தெரியல. ஒண்ணு மட்டும் நிச்சயம், லைப்ல சீக்கிரம் பெரிய ஆளா வந்துற கூடாதுனு நெனக்கிறேன். ஏன்னா, பொய்யான வெற்றியை விட, உண்மையான தோல்வி முக்கியம்.
தொடர்புக்கு: abbasakbar@comicbook.com.sg