'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 1500-வது எபிசோட் படப்பிடிப்பிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக வெளியேறும் வீடியோ காட்சி ஒன்று நேற்று வெளியானது.
சேனல் அதிகாரி ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் "உங்கள் மீது ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. இந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தவில்லை" என்கிறார். அதை கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மைக்கை பிடுங்கி எரிந்துவிட்டு அந்த அரங்கை விட்டு வெளியேறுகிறார்.
சொல்வதெல்லாம் நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறி விட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக சேனலே ஏற்பாடு செய்த செட்-அப் தான் என்று சேனல் தரப்பிலிருந்து சொல்கிறார்கள். இப்போதெல்லாம் ஏதாவது பரபரப்பு கிளப்பித்தான் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்கிறார்கள் டி.வி ரசிகர்கள்.