டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜூலியும் 4 பேரும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆலியா மானசா. தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். பணக்கார வீட்டுக்கு வேலைக்காரியாக சென்று அந்த வீட்டின் செல்லப்பிள்ளை சஞ்சயை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்து மருமகளாகிறார்.
ஆலியாவை துரத்த அந்த குடும்பத்தினர் செய்யும் சதியும், அதிலிருந்து அவர் தப்பிப்பதும் தான் கதை. ஆல்யா நடிக்கும் செம்பா கேரக்டர் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கும், சேனலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் ராஜா ராணியிலிருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை மறுத்து ஆலியா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நான் நடிக்கும் ராஜா ராணி சீரியல் பற்றி தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.