ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜூலியும் 4 பேரும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆலியா மானசா. தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். பணக்கார வீட்டுக்கு வேலைக்காரியாக சென்று அந்த வீட்டின் செல்லப்பிள்ளை சஞ்சயை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்து மருமகளாகிறார்.
ஆலியாவை துரத்த அந்த குடும்பத்தினர் செய்யும் சதியும், அதிலிருந்து அவர் தப்பிப்பதும் தான் கதை. ஆல்யா நடிக்கும் செம்பா கேரக்டர் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கும், சேனலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் ராஜா ராணியிலிருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை மறுத்து ஆலியா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நான் நடிக்கும் ராஜா ராணி சீரியல் பற்றி தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.