தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரேவதி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். 1990ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இரவில் ஒரு பகல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பெண், ரேவதி, நிறங்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தார். சின்ன சின்ன ஆசை, பூம் பூம் சக்கலக்க, கதை கதையாம் காரணமாம், புதுமை பெண்கள், சிந்தனைகள், சேம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சில காலம் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கியிருந்த ரேவதி இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அழகு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். ரேவதியின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்ப பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் அழகு என்ற கேரக்டரில் நடிக்கிறார் ரேவதி. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒஸ்தி, பவர் பாண்டி படங்களில் அம்மாவாக நடித்த ரேவதி தொடர்ந்து சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.