'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரேவதி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். 1990ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இரவில் ஒரு பகல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பெண், ரேவதி, நிறங்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தார். சின்ன சின்ன ஆசை, பூம் பூம் சக்கலக்க, கதை கதையாம் காரணமாம், புதுமை பெண்கள், சிந்தனைகள், சேம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சில காலம் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கியிருந்த ரேவதி இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அழகு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். ரேவதியின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்ப பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் அழகு என்ற கேரக்டரில் நடிக்கிறார் ரேவதி. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒஸ்தி, பவர் பாண்டி படங்களில் அம்மாவாக நடித்த ரேவதி தொடர்ந்து சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.