ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி நீயா நானா. ஆண்டனி இயக்கத்தில், கோபிநாத் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி பல்வேறு சமூக பிரச்சினைகள் பற்றி அலசி வருகிறது. துணிச்சலுடன் பல பிரச்சினைகளை பேசியுள்ளது. இதன் தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். என்றாலும் அவ்வப்போது சில பிரச்சினைகளையும் இந்த நிகழ்ச்சி சந்தித்து வந்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியின் புரமோ ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. "யார் அழகு கேரளத்து பெண்களா? தமிழ் பெண்களா?" என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அந்த புரமோ கூறியது. 20க்கும் மேற்பட்ட கேரள பெண்களும், தமிழ்நாட்டு பெண்களும் இதில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். கேரள பெண்கள் மலையாள பாடல்களுக்கும், தமிழ் நாட்டு பெண்கள் தமிழ் பாடல்களுக்கும் ஆடியிருக்கிறார்கள். கோபிநாத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த புரமோசை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளார்கள். நிகழ்ச்சிக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என்று பல்வேறு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், சில இடங்களில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22ந் தேதி மதியம் 3மணிக்கு ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது விஜய் டி.வி. "நிகழ்ச்சி எந்த மாதிரி உருவாகி உள்ளது என்பதை பார்க்காமலேயே அதை நிறுத்தச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று சேனல் தரப்பு கூறுகிறது.