ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு கதையில், லட்சுமியின் என்.டி.ஆர் என்ற படம் தயாராக உள்ளது. சர்ச்சை இயக்குனர் ராம்கோபால்வர்மா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டீலை அவர் தனது இணைய பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், தனது தந்தை என்டிஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதியின் பின்னணியில் இருந்து கதை நகர்த்தப்படுவதால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார் பாலகிருஷ்ணா. ஆனால், அப்படி கதை பண்ணினால் தான் வியாபார ரீதியாக வெற்றிபெற முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் ராம் கோபால் வர்மா.
அதையடுத்து இந்த விசயத்தில் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பாத பாலகிருஷ்ணா, இப்போது அந்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதோடு, தந்தையின் படம் என்பதால் அந்த படத்தை தானே தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். அதன்காரணமாக, தனது மகன் பிராமினி, மகள் தேஜஸ்வினி ஆகியோரது பெயரில் பிரம்மா தேஜா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் பாலகிருஷ்ணா.