டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்த படத்தை அடுத்து தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். அந்த படத்தை ராம்கோபால்வர்மா இயக்குகிறார். தனது தந்தையின் கதாபாத்திரம் என்பதால் அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வமாகவே இருந்தார் பாலகிருஷ்ணா.
ஆனால் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டீலை ராம்கோபால் வர்மா வெளியிட்டதில் இருந்து டென்சனில் இருக்கிறாராம் பாலகிருஷ்ணா. காரணம், அந்த கதையை என்டிஆரின் கதையாக இல்லாமல் அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை பண்ணியிருக்கிறாராம் ராம்கோபால்வர்மா.
அதன் காரணமாகத்தான் அந்த படத்திற்கு லட்சுமியின் என்டிஆர் -என்று பெயர் வைத்துள்ளாராம். இப்படி லட்சுமி பார்வதியின் கோணத்தில் கதை செல்வதால், தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல் லட்சுமி பார்வதியின் வாழ்க்கை வரலாறு படமாகி விடும் என்று எரிச்சலில் இருக்கிறாராம் பாலகிருஷ்ணா.