தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவின் பிரமாண்ட சினிமாவாகவும், இந்த நூற்றாண்டின் பிரமாண்ட சினிமாவாகவும் போற்றப்படுகிறது பாகுபலியின் இரண்டாம் பாகம். 300 கோடியில் உருவான படம் 1600 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கினார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர் உள்பட பலர் நடித்திருந்தனர். மரகதமணி இசை அமைத்திருந்தார், கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஷோபு எர்லகண்டா, பிரசாத் தேவினேனி தயாரித்திருந்தார்கள்.
தமிழ், தெலுங்கில் தயாரான படம் ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 28ந் தேதி வெளியான இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நெட் ஒர்க் நிறுவனம் பலகோடி ரூபாய்க்கு வாங்கியது. அதன் ஒரு அங்கமான விஜய் டி.வியில் இந்தப் படம் வருகிற 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அன்றைதினம் தெலுங்கு, ஹிந்தி சேனலிலும் இந்தப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. படம் வெளியாகி ஆறே மாதத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தீபாவளிக்குதான் புதுப் படங்கள் திரையிடுவார்கள். இப்போது அந்த டிரண்டில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. தீபாவளிக்கு போடும் புதுப்படங்களில் விளம்பரம் செய்ய வர்த்தக நிறுவனங்கள் விரும்புவதில்லை. காரணம் அப்போது தீபாவளி வியாபாரம் முடிந்திருக்கும். தீபாவளிக்கு முன்புதான் அவர்களுக்கு விளம்பரம் தேவை. அதை கருத்தில் கொண்டே பாகுபலி இரண்டாம் பாகம் தீபாவளிக்கு முன்னதாக ஒளிபரப்பாகிறது. தீபாவளிக்கு வேறு புதிய படம் ஒளிபரப்பாகும்.