அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய், காக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ்க்கும், சுமங்கலி சீரியல் நாயகி திவ்யாவுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள் ளது. அக்டோபர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இதுபற்றி சுமங்கலி திவ்யா கூறுகையில், எங்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. இப்போது தமிழுக்கு புரட்டாசி மாதமாக இருப்பதால் ஐப்பசியில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் நடைபெற உள்ளது. இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், எங்களது திருமணம் காதல் திருமணமல்ல. பெற்றோரால் நிச்சயப்பட்ட திருமணம். ஆர்.கே.சுரேஷைப்போன்று எனது சொந்த ஊரும் ராமநாதபுரம்தான். அவரது ஊருக்கு அருகில் எனது ஊர் உள்ளது.
மேலும், இப்போது நான் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அதேபோல் சுமங்கலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ஆனால் இதன்பிறகு நான் சினிமா, சீரியல் என எதிலும் ஒப்பந்தமாக மாட்டேன். முழு நேர இல்லத்தரசியாகி விடுவேன். என்றாலும், சுமங்கலி சீரியலில் ஒப்பந்தம் இருப்பதால் சீரியல் முடிகிறவரை நடித்துக்கொடுப்பேன். அதன்பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாக மாட்டேன் என்கிறார் திவ்யா.