சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய், காக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ்க்கும், சுமங்கலி சீரியல் நாயகி திவ்யாவுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள் ளது. அக்டோபர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இதுபற்றி சுமங்கலி திவ்யா கூறுகையில், எங்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. இப்போது தமிழுக்கு புரட்டாசி மாதமாக இருப்பதால் ஐப்பசியில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் நடைபெற உள்ளது. இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், எங்களது திருமணம் காதல் திருமணமல்ல. பெற்றோரால் நிச்சயப்பட்ட திருமணம். ஆர்.கே.சுரேஷைப்போன்று எனது சொந்த ஊரும் ராமநாதபுரம்தான். அவரது ஊருக்கு அருகில் எனது ஊர் உள்ளது.
மேலும், இப்போது நான் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அதேபோல் சுமங்கலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ஆனால் இதன்பிறகு நான் சினிமா, சீரியல் என எதிலும் ஒப்பந்தமாக மாட்டேன். முழு நேர இல்லத்தரசியாகி விடுவேன். என்றாலும், சுமங்கலி சீரியலில் ஒப்பந்தம் இருப்பதால் சீரியல் முடிகிறவரை நடித்துக்கொடுப்பேன். அதன்பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாக மாட்டேன் என்கிறார் திவ்யா.