ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்படங்களில் தான் ஆபாசம் என்றால் இப்போது சின்னத்திரையிலும் தொடர ஆரம்பித்துவிட்டது. சோனி தொலைக்காட்சியில் பெஹ்ரிதார் பியா கி என்ற தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து ஒளிபரப்பாக தொடங்கியது. இது ஒரு ஜமீன் குடும்பத்து கதை. ஆரம்பத்தில் நன்றாக கலகலப்பாகத்தான் போய்கொண்டிருந்து. ஆனால் கடந்த சில வாரங்களாக கதை வில்லங்கமானது.
ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு, இன்னொரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு காதல் வருகிறது. சிறுவன் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் குடும்பத்து ஜமீன், காதலுக்கு உதவி செய்கிறது. ஒரு கட்டத்தில் ரகசியமாக திருமணமும் செய்து வைத்து விடுகிறது. இருவரும் இணைந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் போனது கதை.
இந்த கதை பற்றி பேஸ்புக், டுவிட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிட்டார்கள். உஷாரான சேனல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பியது. அதன் பிறகும் எதிர்ப்பு கடுமையானது. சில தன்னார்வ அமைப்புகள் வழக்கு போட்டு சீரியலை நிறுத்த முடிவு செய்தது. இதனால் சேனல் தற்போது தொடர் ஒளிபரப்பை நிறுத்திவிட்டது. இதன் மூலம் சின்னத்திரை சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.