விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தொடர்ந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்து வருகிறது சரவணன் மீனாட்சி தொடர். இந்த தொடரின் நாயகன், நாயகிகள் நிறைய மாறிவிட்டார்கள். ஆனால் தொடர்ந்து தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஆயிரம் எபிசோட்களை கடந்தது சரவணன் மீனாட்சி. ஆனால் காதல் கதையாக தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த தொடர், இப்போது காலத்துக்கு ஏற்றமாதிரி தன்னையும் மாற்றிக் கொண்டு திகில் தொடராக மாறியிருக்கிறது.
கதைப்படி, சரவணன் குடும்பம் ஓட்டல் நடத்த விரும்புகிறது. இதற்காக ஒரு வீடு பிடித்து அதையே ஓட்டலாக மாற்றுகிறார்கள். அந்த வீட்டுக்குள் பேய் இருக்கிறது. அது மீனாட்சிக்குள் புகுந்து கொள்கிறது. இதனால் கோவிலுக்கு ஆர்வமா செல்லும் மீனாட்சி, இப்போது கோவில் என்றால் தவிர்த்து விடுகிறார். அந்த வீட்டுக்குள் இருக்கும் பேய் யார். அந்த பேய் ஏன் மீனாட்சிக்குள் வர வேண்டும். அடுத்து அது என்ன செய்யப்போகிறது என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் பரபரப்பு கிளப்ப இருக்கிறது.