'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரைகளில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் சஞ்சீவ். திடீ ரென்று காணாமல் போன அவர் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த படங்கள் உடனடியாக தொடங்கப்படாததால் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மீண்டும் பிரவேசித்தார். தற்போது ஜீ சூப்பர் டேலண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுபற்றி சஞ்சீவ் கூறுகையில், நான் சினிமாவில்தான் நடிகராக அறிமுகமானேன். பல படங்களில் நடித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி சினிமாவில் இடம் கிடைக்கவில்லை. அதனால்தான் சின்னத்திரைக்கு வந்தேன். இங்கு வந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி விட்டேன். தற்போதுகூட யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
அதற்காக நான் முழுநேர சீரியல் நடிகராக இருக்க விரும்பவில்லை. எனது நோக்கம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான். சமீபகாலமாக சிவகார்த்திகேயன், சந்தானம் மட்டுமின்றி சில சீரியல் நடிகர், நடிகைகள்கூட சின்னத்திரையில் இருந்து சென்று சினிமாவிலும் சாதித்து வருகிறார்கள். அதனால், கூடிய சீக்கிரமே ஒரு நல்ல படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெறுவேன் என்று கூறும் சஞ்சீவ், சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி, புதிய கீதை ஆகிய படங்களில் விஜய்யின் நண்பனாக நடித்திருக்கிறேன், அதோடு, விஜய் சினிமாவில் என்ட்ரியானபோது நானும் ஹீரோவாக நடிக்க முயற்சி எடுத்தேன். ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் சீரியல் நாயகனாகி விட்டேன் என்கிறார்.