ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பசங்க படத்தில் நடித்ததின் மூலம் புகழ்பெற்றவர் செந்தில்குமாரி. அதன் பிறகு பசங்க செந்தி என்றே அழைக்கப்பட்டார். தனது கீச்சு குரல் யதார்த்த நடிப்பால் தொடர்ந்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்தார். தற்போது மெர்சல், மதுர வீரன், சர்வர் சுந்தரம் படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சின்னத்திரை நடிகையாக மாறியிருக்கிறார் செந்தி. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் செல்லமான அம்மா மற்றும் மாமியாராக நடித்து வருகிறார்.
"இப்போதும் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் இயக்குனருக்கு போன் பண்ணி ஒரு நாள் பாராட்டினேன். அதிலிருந்து அவரும் நீங்களும் நடிங்களேன் என்ற வற்புறுத்திக் கொண்டே இருந்தார், மறுத்து வந்தேன். தொடர் வற்புறுத்தலால் நடித்துதான் பார்ப்போமே என்று நடிக்க ஆரம்பித்து விட்டேன். சின்னத்திரையில் நடிக்க ஆரம்பத்ததிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் எனக்கு சினிமாதான் முக்கியம். சரவணன் மீனாட்சிக்கு பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை" என்கிறார் செந்தி.