இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வாணி ராணி, தாமரை, தலையணை பூக்களில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா ராணி, குழந்தை பேறுக்காக சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அந்த குழந்தைக்கு அதிதி இசை என்று அழகான பெயரும் வைத்துள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
முன்பு நடித்த அதே சீரியல்களில் மீண்டும் நடிக்கிறார். அதெப்படி 2 மாத இடைவெளிக்கு பிறகு அதே கேரக்டர்களில் தொடர முடியும் என்ற கேள்விக்கு சீரியலில் எல்லாமே சாத்தியம் என்பதுதான் பதில்.
தலையணைப் பூக்களில் வேலைக்கார பெண் மல்லிகாகவாக நடித்தவர். கதைப்படி அவர் சில காலம் காணாமல் போய் இப்போது 5 நட்சத்திர ஓட்டல் முதலாளியம்மாவாக திரும்புகிறார். அது எப்படி என்பது இனி வரும் எபிசோட்களில் தெரியும்.
தாமரை தொடரில் சிநேகாகவா நடித்தவர். இப்போது கவிதாவாக திரும்புகிறார். வாணி ராணியில் எரித்துக் கொல்லப்பட்ட டிம்பிளாக நடித்தவர் இப்போது மீண்டும் உயிருடன் திரும்பி வருகிறார். இப்படி நீலிமா ராணிக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இதோடு சில புதிய சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.