சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
விஜய் டிவிக்காக நடிகை குட்டி பத்மினி, வீர மங்கை வேலு நாச்சியாரைப் பற்றிய ஒரு மெகா சீரியலை தயாரிக்கிறார். சரித்திர கால பின்னணியில் உருவாகும் அந்த தொடரின் பிரி புரொடக்சன்ஸ் வேலைகள் முடிந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள். அதையடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தயிருந்த நேரம், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானது.
ஆனபோதும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் வீரமங்கை வேலு நாச்சியார் தொடரை ஒளிபரப்ப விஜய் டிவி முடிவு செய்திருந்ததாம். ஆனால் இப்போது பிக்பாஸ் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் போய்க்கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் சரியான டிஆர்பி கிடைக்காது என்று வீர மங்கை வேலு நாச்சியார் தொடரை பிக்பாஸ் முடிந்த பிறகு ஒளிபரப்பு முடிவு செய்திருக்கிறதாம் விஜய் டிவி.
அதன்காரணமாக வீரமங்கை வேலு நாச்சியார் தொடருக்காக பிரமாண்ட செட்டுகள் தயார் செய்த குட்டி பத்மினி, படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு விஜய் டிவியின் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.