இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
விஜய் டிவிக்காக நடிகை குட்டி பத்மினி, வீர மங்கை வேலு நாச்சியாரைப் பற்றிய ஒரு மெகா சீரியலை தயாரிக்கிறார். சரித்திர கால பின்னணியில் உருவாகும் அந்த தொடரின் பிரி புரொடக்சன்ஸ் வேலைகள் முடிந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள். அதையடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தயிருந்த நேரம், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானது.
ஆனபோதும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் வீரமங்கை வேலு நாச்சியார் தொடரை ஒளிபரப்ப விஜய் டிவி முடிவு செய்திருந்ததாம். ஆனால் இப்போது பிக்பாஸ் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் போய்க்கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் சரியான டிஆர்பி கிடைக்காது என்று வீர மங்கை வேலு நாச்சியார் தொடரை பிக்பாஸ் முடிந்த பிறகு ஒளிபரப்பு முடிவு செய்திருக்கிறதாம் விஜய் டிவி.
அதன்காரணமாக வீரமங்கை வேலு நாச்சியார் தொடருக்காக பிரமாண்ட செட்டுகள் தயார் செய்த குட்டி பத்மினி, படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு விஜய் டிவியின் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.