இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் டிவிக்காக நடிகை குட்டி பத்மினி, வீர மங்கை வேலு நாச்சியாரைப் பற்றிய ஒரு மெகா சீரியலை தயாரிக்கிறார். சரித்திர கால பின்னணியில் உருவாகும் அந்த தொடரின் பிரி புரொடக்சன்ஸ் வேலைகள் முடிந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள். அதையடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தயிருந்த நேரம், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானது.
ஆனபோதும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் வீரமங்கை வேலு நாச்சியார் தொடரை ஒளிபரப்ப விஜய் டிவி முடிவு செய்திருந்ததாம். ஆனால் இப்போது பிக்பாஸ் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் போய்க்கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் சரியான டிஆர்பி கிடைக்காது என்று வீர மங்கை வேலு நாச்சியார் தொடரை பிக்பாஸ் முடிந்த பிறகு ஒளிபரப்பு முடிவு செய்திருக்கிறதாம் விஜய் டிவி.
அதன்காரணமாக வீரமங்கை வேலு நாச்சியார் தொடருக்காக பிரமாண்ட செட்டுகள் தயார் செய்த குட்டி பத்மினி, படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு விஜய் டிவியின் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.