ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனின் வரவுக்குப் பிறகு சின்னத்திரையில் இருந்து நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவுக்குள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தொகுப்பாளினிகள் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தபோதும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகியான பிரியா பவானி சங்கர், மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் நடித்து வரும் ஜனனியும் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வேலைக்காரன் படத்தில் நயன்தாராவின் தோழியாக அவர் நடித்திருக்கிறாராம். மேலும், சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், படிப்படியாக முன்னேறவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.