டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குழந்தை நட்சத்திரமாக சினிமா, சின்னத்திரைகளில் நடித்து வந்தவர் கல்யாணி. ஒருகட்டத்தில் பூர்ணிதா என்று பெயரை மாற்றிக்கொண்டு சினிமாவில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்தவர், அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான கல்யாணி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே சீரியல் மற்றும் தொகுப்பாளினி வாய்ப்புகளுக்காக முயற்சி எடுத்து வந்த அவருக்கு தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சீனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சீரியல்களில் நல்ல அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுத்து வரும் கல்யாணி, தனது கணவர் ரோஹித்தும் தன்னை என்கரேஜ் பண்ணுவதால் சின்னத்திரையில் தொடர்ந்து பங்களிக்க முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்.