தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹிந்தி சேனல்களில் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நாளை(ஜூன் 25ம் தேதி) முதல் ஒளிபரப்பாகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. 14 செலிபிரிட்டிகள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் வசிக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சின் சாராம்சம். கலந்து கொள்ளப் போகும் 14 பேர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிகழ்ச்சிக்காக பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் பிரமாண்ட வீடு ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்குள் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த கேமராக்கள் பங்கேற்பாளர்களை கண்காணிக்கும். 2 கழிவறைகள் 2 குழியலறைகள் உள்ளது. இதைத்தான் 14 பேரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 5 பேர் மட்டுமே குளிக்க வசதியுள்ள ஒரு நீச்சல் குளமும் இருக்கிறது. கடிகாரம், செல்போன், இண்டெர் நெட், ரேடியோ, தொலைக்காட்சி எதுவும் இருக்காது ஒரே ஒரு மைக்ரோ போன் இருக்கும். அது பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி அமைப்பாளருடன் தொடர்புகொள்ள மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தான் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த வீட்டை நேற்று பத்திரிகையாளர்களுக்கு சுற்றிக் காட்டினார்கள். நிகழ்ச்சி எப்படி படமாக்கப்படுகிறது என்பதை விஜய் டி.வி அதிகாரிகள் விளக்கினார்கள்.