ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைரக்டர் சுந்தர்.சி - நடிகை குஷ்பு இணைந்து தயாரித்து வரும் மெகா தொடர் நந்தினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை ராஜ்கபூர் இயக்கி வருகிறார். இதில் நித்யாராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நந்தினி தொடரில் கங்கா என்ற கேரக்டரில் நடித்து வரும் நித்யாராம், கன்னடத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே தமிழில் அவள் என்ற தொடரில் நடித்த அவர் கன்னடம், தெலுங்கிலும் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில், இவரது இணையபக்கத்தில் ஒரு சென்னை வாலிபர், அடிக்கடி ஆபாச மெசேஜ்களை அனுப்பி நித்யாராமை டென்சன் செய்து வந்திருக்கிறார். இதை பலமுறை சகித்துக்கொண்டு வந்த அவர், தற்போது அந்த இளைஞரின் புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதோடு, "தன்னுடைய ரசிகர் எனக்கூறிக்கொள்ளும் இவர் எனக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருகிறார். இது போன்ற செயல்களை நான் அனுமதிப்பதில்லை. இதுபற்றி மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், எந்த பெண்ணிடமும் அவன் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவுமே இதை இங்கு பதிவு செய்கிறேன். எனக்கு இனிமையான பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்பதை விட முதலில் நான் ஒரு பெண் என்பதை அவன் உணர்ந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.