ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 5வது சீசன் இப்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. பல மாதங்களாக நடந்து வந்த இந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இருந்து 5 பேரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
இறுதிப்போட்டிகள் நாளை மறுநாள் (17ந் தேதி) மாலை பொதுமக்கள் முன்னிலையில் நடக்கிறது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம். மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டியின் நடுவர்களாக பாடகி மால்குடி சுபா, சித்ரா, மனோ, பணியாற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.