ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்பட பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் ராஜ்குமார். இவர் தற்போது ரங்கூன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழாவில், ராஜ்குமார் ரொம்ப கூலான மனிதர் என்று அந்த படத்தில் நடித்தவர்கள் பேசினர். ஆனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யாவோ, அவர் கூலானவர் அல்ல, டென்சன் பார்ட்டி என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த படத்தின் டைரக்டர் ராஜ்குமார் எனது நண்பர். அவர் அறிமுகமாகிற முதல் படத்தில் அவரது பெயரை மீடியாக்களிடம் சொல்லி அறிமுகம் செய்வது எனக்கு சிறப்பான விசயம். ஆனால் ஒரேயொரு டவுட். அவரைப்பற்றி பேசியவர்கள் அனைவருமே அவர் ரொம்ப கூல் பர்சன், டென்சனே ஆகமாட்டார் என்றனர்.
ஆனால் எனக்கு தெரிந்து சின்னத்திரையில் இருந்தபோது அவர் டென்சன் மட்டும்தான் ஆவார். என் போனில்கூட அவர் பெயரை மன உளச்சல் என்று தான் நான் பதிவு செய்துள்ளேன். காரணம், எப்போது பார்த்தாலும் ஒரே மனஉளச்சளோடவே இருப்பார். இன்னைக்குத்தான் அவர் சிரிச்சி நான் பார்க்கிறேன் என்றார் ரம்யா.