இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராதிகாவின் வாணி ராணி சீரியலில் நடித்து வந்தவர் சபீதா ராய். அவருக்கும், அந்த சீரியலின் புரொடசன் மேனேஜர் சுகுமாறனுக்கும் ஏற்பட்ட கைகலப்பு வீடியோ வைரலாக பரவியது. அதையடுத்து அவர்களுக்கிடையே கள்ளக்காதல் இருப்பதாகவும் செய்தியானது. ஆனால் அதை சபீதா ராய் கண்ணீல் மல்க மறுத்தார். எனக்கு தரவேண்டிய பணத்தை வாங்கச்சென்ற இடத்தில்தான் கைகலாப்பாகி விட்டது என்று கூறியிருந்தார் சபீதாராய்.
அதைத் தொடர்ந்து அவர் வாணி ராணி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். புதிய சீரியல்களுக்கும் யாரும் அவரை புக் பண்ணவில்லை. அதனால் சீரியல்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம் என்று தற்போது மிஷ்கின் இயக்கி வரும் துப்பறிவாளன் படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் சபீதாராய். சின்னத்திரையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சபீதாராய், தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.