இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாக நடித்து வருபவர் தாடி பாலாஜி. இவர் ஏற்கனவே குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் அவரது மனைவி நித்யா, காவல் நிலையத்தில் தாடி பாலாஜி மீது புகார் கொடுத்தார். அதில், கணவர் தன்னை குடித்து விட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச்சொல்லி திட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதுகுறித்து தாடி பாலாஜியிடம் கேட்டபோது, குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வருவது சகஜமான ஒன்றுதான். அதேபோல்தான் என் வீட்டிலும் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. மேலும், நான் எனது மாமனார் வீட்டில்தான் வாடகை கொடுத்து குடியிருக்கிறேன். ஆனபோதும் என்னை அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். அதோடு, என் மனைவியுடன் எனக்கு ஏற்படும் சிறிய சண்டையை சிலர் ஊதி பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் என் மனைவி என் மீது புகார் செய்திருக்கிறார். ஆனாலும், இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன் என்கிறார் தாடி பாலாஜி.