நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், நித்யாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் தன்னை தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பதாக நித்யா ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். ஆனால் பாலாஜி நாங்கள் ஒற்றமையாகத்தான் இருக்கிறோம் என்று இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவுடன் இன்னொரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனுவில் உண்மை இருக்கும் பட்சத்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.