பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், நித்யாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் தன்னை தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பதாக நித்யா ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். ஆனால் பாலாஜி நாங்கள் ஒற்றமையாகத்தான் இருக்கிறோம் என்று இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவுடன் இன்னொரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனுவில் உண்மை இருக்கும் பட்சத்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.