ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மியூசிக் சேனல்களின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருக்கிறார் நிவேதிதா. தற்போது செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் சினிமா ஒன்றை இயக்கும் முயற்ச்சியில் இருக்கிறார் நிவேதிதா.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் எனக்கு நடிப்பு வராது என்று மறுத்தவர், இப்போது சினிமா இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தமிழ், இந்தி, ஆங்கிலம், கொரியன் படங்களை பார்த்து வருகிறார். "சின்ன வயசிலிருந்தே எனக்கு கதை கேட்கவும், சொல்லவும் பிடிக்கும். சினிமாவிலும் இயக்குனராகி கதை சொல்ல ஆசை. நடிப்பு எனக்கு வராது என்று எனக்கே தெரியும். அதனால் தான் அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது சீரியசாகவே ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்" என்கிறார் நிவேதிதா.