தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் இடம்பெறும் அனைத்தும் இப்போது சின்னத்திரை சீரியல்களிலும் இடம்பெற ஆரம்பித்து விட்டது. சினிமாவுக்கு நிகராக சீரியல் தயாரிக்கிறோம் என்றவர்கள் பிரமாண்டம், பாடல்கள், விறுவிறு திரைக்கதை என்று பயணிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் முத்தக்காட்சி, பாலியல் பலாத்கார காட்சி, கவர்ச்சி என பாதை மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
சின்னத்திரை சீரியல் உலகில் இப்போதைக்கு முத்த மழை பொழிந்து கொண்டிருப்பவர் மாப்பிள்ளை சீரியலில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் ஜனனி. எபிசோடுக்கு எபிசோட் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். "என்னுடைய கேரக்டர் ரொம்ப போல்டானது முத்தக் காட்சியெல்லாம் இருக்கும் அதற்கு கடுமையான விமர்சனங்கள் வரும் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியுமா?" என்று கேட்டுத்தான் நடிக்கவே அழைத்தார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.
அன்பை வெளிப்படுத்த முத்தம் சிறந்த வழிதானே இதுவரை சீரியலில் யாரும் அப்படி நடிக்கதாதல் இதனை பெரிதாக பார்க்கிறார்கள். சினிமாவில் முத்தக் காட்சிகள் இடம்பெறும்போது சீரியல்களில் இடம்பெறக்கூடாதா என்ன? சிலர் இதை விமர்சித்தாலும் பலர் இதனை வரவேற்கவே செய்கிறார்கள். நான் நடிக்கும் கேரக்டருக்கு என்ன தேவையோ அதைச் செய்வேன். இந்த துணிச்சல் எனக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தருகிறது" என்று விளக்கம் அளித்துள்ளார் ஜனனி.