நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
சினிமா படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சின்னத்திரையில் இருந்து ரம்யா, அஞ்சனா போன்ற தொகுப்பாளினிகள்தான் சமீபகாலமாக பங்கேற்று வருகிறார்கள். ஆனால், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஏன்டா தலையில எண்ண வைக்கல படத்தின் ஆடியோ விழாவுக்கு எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்போது அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதையடுத்து பேசிய பாவனா பாலகிருஷ்ணன், நான் இதுவரை எந்த சினிமா படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று அழைத்தபோது என்னை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொன்னார். நான் இந்த ஆடியோ விழாவிற்குள் வந்தது இப்படித்தான் என்று கூறிய பாவனா, தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி தொகுத்து வழங்கினார்.