ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சினிமாவில் நடிகர்கள் தான் ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் சீரியல்களில் நடிகைகள் தான் ஹீரோக்களாக இருக்கிறோம். நாங்கள் தான் கதையை வழி நடத்தி செல்கிறோம். அந்த வகையில், சினிமாவில் ஹீரோக்கள் ஆல் இன் ஆல் என்றால், சீரியல்களில் நடிகைகளாகிய நாங்கள் தான் ஆல் இன் ஆல் என்கிறார் சுமங்கலி சீரியல் நாயகி திவ்யா. தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
சுமங்கலி சீரியலில் அனு என்ற லீடு ரோலில் தற்போது நான் நடித்து வருகிறேன். குடும்பப் பிரச்னையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் நேயர்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியிருக்கிறது. இதில் கதைப்படி பாசிட்டீவான அமைதியான பெண்ணாக நடிக்கும் நான், பிளஸ்-2 படித்து விட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ரோலில் நடிக்கிறேன். மேலும், சொத்து பிரச்னை, ஜாதகம், திருமண பிரச்னை என பல பரபரப்பான கதை திருப்பங்களுடன் இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் சவாலான வேடம் என்பதால் நேயர்கள் மத்தியில் இந்த சீரியல் பெரிய அளவில் என்னை கொண்டு சேர்த்துள்ளது.
மேலும், சினிமாவில் நடிகர்கள் தான் ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் சீரியல்களில் நடிகைகளாகிய நாங்கள் தான் ஹீரோக்களாக இருக்கிறோம். நாங்கள் தான் கதையை வழி நடத்தி செல்கிறோம். அந்தவகையில், சினிமாவில் ஹீரோக்கள் ஆல் இன் ஆல் என்றால் சீரியல்களில் நடிகைகளாகிய நாங்கள்தான் ஆல் இன் ஆல். அதோடு, சினிமாவில் பல படங்களில் நடித்த பிறகுதான் மக்களுக்கு பரிட்சயமாவார்கள். ஆனால் சீரியல்களில் அப்படியல்ல. ஒரு நல்ல சீரியலில் நடித்து விட்டாலே பிரபலமாகி விடுவோம். எங்கு போனாலும் எங்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று பழகுகிறார்கள். இது சினிமாவில் கிடைக்காது சீரியல்களில் நடிப்பதால் மட்டுமே கிடைக்கும்.
இந்த சுமங்கலி சீரியலில் மாதம் 15 நாட்கள் நடிக்கிறேன். மீதமுள்ள நாட்களில் சினிமா, விளம்பர படங்களில் நடிக்கிறேன். முக்கியமாக, இந்த சீரியலில் நடிப்பதால் இன்னும் 2 வருடங்களுக்கு நான் வேறு சீரியல்களில் நடிக்ககூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனால் என்னைத்தேடி வந்த சில சீரியல்களில் நடிக்க மறுத்து விட்டேன் என்று கூறும் திவ்யா, சீரியலில் நடிப்பவர்கள் சீரியலின் கதையைப்போன்றே நிஜத்திலும் நாங்கள் நண்பர்களாக ஒரே குடும்பமாகி விடுகிறோம். அதனால் இரண்டு நாள் படப்பிடிப்பு இல்லையென்றாலும் நலம் விசாரித்துக் கொள்கிறோம். அந்த அளவுக்கு சீரியல்களில் எங்களுக்கிடையே அன்பு பாசத்தை அதிகப்படுத்தி விடுகின்றன என்கிறார்.