'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
ஆதித்யா சேனலில் தல தளபதி நிகழ்ச்சி நடத்தி வருபவர் அசார். ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல, சாரல் போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனை பார்த்துதான் உங்களைப்போன்ற தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தா? என்று அவரைக் கேட்டால், அதை மறுக்கிறார் அசார்.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பல தொகுப்பாளர்கள் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று வந்துள்ளனர். அவருக்கு பிறகு வந்த தொகுப்பாளர்களும் இருக்கிறார்கள். அதனால் தொகுப்பாளர்களுக்கு சிவகார்த்திகேயன்தான் ரோல் மாடல் என்று சொல்ல முடியாது. ஒருத்தர் டிவியில் இருந்து வந்து சினிமாவில் ஜெயித்ததினால் அவரைப்பார்த்துதான் மற்ற தொகுப்பாளர்களும் சினிமாவுக்குள் வருவதாக நினைக்கிறார்கள்.
என்னைப்பொறுத்தவரை சினிமா ஆசை என்பது சின்ன வயதிலேயே வந்ததுதான். ஆனால் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஜெயித்த பிறகு மக்கள் நம்மையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் வந்தது. அந்த பக்கம் போகாதீங்க பேய் இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரேயொருத்தர் மட்டும் போய் வந்த பிறகு எல்லோருமே தைரியமா போவாங்க இல்லியா, அந்த மாதிரி ஆயிடுச்சு.
மேலும், முதன்முதலாக டிவியில் இருந்து போய் சினிமாவில் காமெடியனாக ஜெயித்தது சந்தானம். அதன்பிறகு ஹீரோவாக ஜெயித்தவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இவங்க என்னைப் போன்ற தொகுப்பாளர்களின் தைரியத்துக்கு ரோல்மாடல் என்றுதான் சொல்ல வேண்டும். நல்லா நடிச்சா போதும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அசார்.