வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் ராகவா லாரன்ஸ், அநாதை இல்லங்கள் நடத்துகிறார். அம்மாவுக்கு கோவில் கட்டுகிறார். ராகவேந்திரருக்கு கோவில் கட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னால் நிற்கிறார். தற்போது அவரின் கவனம் விவசாயிகளின் பக்கம் திரும்பியிருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் குடும்பத்தையும் தத்தெடுத்திருக்கும் அவர் விவசாயிகள் நலனுக்காக மிகப்பெரிய நடன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த திட்டமிட்டருக்கிறார். இதற்காக விவசாயிகளின் உயிர் காப்போம் சொல்லாதே செய் என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார்.
இந்த அமைப்பின் பயணத்தை சின்னத்திரை மூலம் தொடங்குகிறார். சமீபத்தில் ஜீ தமிழ் ஸ்டூடியோவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்கட்டமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். மாணவர்களிடம் ஒரு ரூபாய் வசூலித்தும், கலை நிகழ்ச்சி நடத்தியும் நிதி திரட்டப்போவதாக அறிவித்தார். இந்த சிறப்பு நிகழ்ச்சி நாளை தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சினிமா நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு சிறப்பான நிகழ்ச்சி.